Saturday, August 30, 2008

அவுட் சோர்சிங்: இந்தியாவைக் கலங்க வைத்துள்ள ஒபாமா!

டெல்லி: அமெரிக்க நிறுவனங்கள் தங்கள் நிறுவனப் பணிகளை வெளியாட்களுக்குத் தரும் அவுட் சோர்சிங் முறையைக் கைவிட வேணடும். அமெரிக்கர்களையே தொழில் நிறுவனங்களில் பயன்படுத்த வேண்டும் என ஜனநாயகக் கட்சி அதிபர் தேர்தல் வேட்பாளர் ஓபாமா கூறியுள்ளார்.

சமீபத்தில் ஓபாமா ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது, அமெரிக்க நிறுவனங்கள் அவுட் சோர்சிங் முறையைக் கைவிட வேண்டும். அமெரிக்கர்கள் மயமாக தொழில் நிறுவனங்கள் இருக்க வேண்டும்.

நான் அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டால், அவுட்சோர்சிங் செய்யும் அமெரிக்க கம்பெனிகளுக்கு வழங்கப்படும் வரிச்சலுகையை ரத்து செய்வேன். அமெரிக்க வேலை வாய்ப்புகள் வெளிநாட்டினரிடம் ஒப்படைக்கப்படுவதை முற்றிலுமாகத் தடுப்பேன்.

அவுட்சோர்சிங் செய்யாத அமெரிக்க நிறுவனங்களுக்கு மட்டுமே இனி வரிச்சலுகை அளிக்கப்படும் நிலையை உருவாக்கப் போகிறேன் என்றார் அவர்.

ஓபாமாவின் இந்தப் பேச்சு இந்திய தொழில் துறையினரை குறிப்பாக ஐடி துறையினரை பெரும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. காரணம் இன்றைக்கு இந்தியப் பொருளாதார வளரச்சியில் இந்த அவுட் சோர்சிங் வருமானம் முக்கியப் பங்கு வகிக்கிறது. என்றாலும் ஒபாமாவின் இந்தப் பேச்சுக்கு அமெரிக்க நிறுவனங்கள் மத்தியில் அவ்வளவாக வரவேற்பு இல்லை என்பது குறிப்பிடத் தக்கது.

1 comment: