Monday, August 11, 2008

ஒலிம்பிக்: இந்தியாவின் முதல் தங்க மகனுக்கு பரிசுகள் குவிகின்றன!!


பெய்ஜிங் ஒலிம்பிக்கில் இன்று நடந்த ஆடவர் 10 மீட்டர் ஏர்-ரைஃபிள் துப்பாக்கிச் சுடுதலில் இந்திய வீரர் அபினவ் பிந்த்ரா தங்கப் பதக்கம் வென்றார்.
இந்தப் பதக்கம் 28 ஆண்டுகளுக்குப் பின் இந்தியாவுக்குக் கிடாத்த முதல் பதக்கம்மட்டுமல்ல, ஒலிம்பிக் தனி நபர் போட்டியில் இந்தியா வென்றுள்ள முதல் தங்கப் பதக்கமும் கூட.

இவருக்கு அடுத்தபடியாக சீனாவின் கினான்-ஷு வெள்ளிப் பதக்கத்தையும், பின்லாந்து வீரர் ஹென்றி ஹக்கினென் வெண்கலப் பதக்கத்தையும் வென்றுள்ளனர். எனினும், இப்போட்டியில் பங்கேற்ற மற்றொரு இந்திய வீரரான ககன் நரங், ஒரே ஒரு புள்ளி வித்தியாசத்தில் இறுதிக்கு தகுதி பெறும் வாய்ப்பைத் தவற விட்டார்.
இப்போட்டியின் 6வது சுற்றில் 9.917 புள்ளிகளுடன் இருந்த ககன் நரங், அடுத்த சுற்றில் 98 புள்ளிகள் மட்டுமே பெற்றார். இதில் மற்ற வீரர்கள் 99 அல்லது 100 புள்ளிகளை எடுத்ததால் ககன் ஒரு புள்ளி வித்தியாசத்தில் இறுதிக்கான வாய்ப்பை இழந்தார்.
இந்தியாவுக்கு 9வது ஒலிம்பிக் தங்கம்:
கடந்த 1980ஆம் ஆண்டு மாஸ்கோ நகரில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் இந்திய ஹாக்கி அணி, ஸ்பெயின் அணியை 4-3 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி தங்கப்பதக்கத்தை கைப்பற்றியது. அப்பதக்கம் ஒலிம்பிக்கில் இந்தியா வென்ற 8வது தங்கப்பதக்கம்.
அந்த பதக்கம் வெல்லப்பட்டு 28 ஆண்டுகள் பின்னர் தற்போது அபினவ் பிந்த்ரா 9வது தங்கப் பதக்கத்தை இந்தியாவுக்காக வென்றுள்ளார்.
ஒரு கோடி பரிசு!
இந்தியாவுக்கு முதல் தனி நபர் தங்கம் வென்ற அப்நவ்வுக்கு பஞ்சாப் மாநில அரசு ரூ.1 கோடி பரிசளிப்பதாக அறிவித்துள்ளது.
இ‌ந்த வெ‌ற்‌றி‌யி‌ன் மூல‌ம் ஒ‌ட்டு மொ‌த்த இ‌ந்‌தியாவு‌க்கு‌ம் அ‌பின‌‌வ் ‌பி‌ந்‌த்ரா பெருமை சே‌ர்‌த்து‌ள்ளதாக பஞ்சாப் முதலமை‌ச்ச‌ர் ‌பிரகா‌ஷ் ‌சி‌ங் பாத‌ல் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

இதேபோ‌ல், அ‌ரியானா மா‌நில முதலமை‌ச்ச‌ர் பூ‌‌பிந்த‌ர் ‌சி‌ங் ஹூடா, ‌பி‌ந்‌த்ராவு‌க்கு ரூ.25 ல‌ட்ச‌ம் ப‌ரிசு வழ‌ங்குவதாக அ‌றி‌வி‌த்து‌ள்ளா‌ர்.


No comments: