Friday, August 29, 2008

நீரவ் ஷாவின் ரூ.100 கோடி கனவு!

கிழக்கு கடற்கரைச் சாலையில் நீரவ் ஷாவின் கனவு நகரம்!

கோலிவுட்டின் இன்றைய ஹாட் ஒளிப்பதிவாரான நீரவ் ஷா சொந்தமாக ஒரு மிகப் பெரிய திரைபேபட நகரை ரூ.100 கோடி செலவில் உருவாக்கப் போகிறார்.

ஐதராபாத்தில் உள்ள புகழ்பெற்ற ராமோஜிராவ் பிலிம் சிட்டிக்கு இணையாக இந்த திரைப்பட நகரை சென்னையில் உருவாக்கும் முயற்சியில் தீவிரமாக இற்ஙகியுள்ளார் நீரவ் ஷா.
இதற்காக ரூ.100 கோடியில் அவர் உருவாக்கியுள்ள திட்டத்துக்கு அரசுத் தரப்பிலும் ஒப்புதல் கிடைத்துவிட்டது. இந்தத் தொகை தோராயமானதுதான், போகப்போக அதசு இருமடங்காகனாலும் வியப்பதற்கில்லை, என்கிறார்கள்.
கிழக்குக் கடற்கரைச் சாலையில் பிரமாண்டமாக உருவாக உள்ள இந்த ஸ்டுடியோவில் ஹாலிவுட்டில் உள்ள அத்தனை நவீன வதிகளும் செய்து தரப்படும் என்கிறார் நீரவ் ஷா.

ஒளிப்பதிவாளர்களின் சிரமத்தை மிகவும் உணர்ந்தவர் என்பதால், ரிமோட் மூலம் இயங்கக் கூடிய நிரந்தர ஒளிவசதியை (காட்சிக்குத் தேவையான ஒளி வசதியை எந்த நேரத்திலும் பெறமுடியும்!) இந்த ஸ்டுடியோவில் அமைக்கவிருக்கிறாராம் நீரவ் ஷா.
இந்த ஸ்டுடியோவுக்கான பூமி பூஜை செப்டம்பர் முதல் வாரத்தில் போடப்படவுள்ளது.

சென்னை நகருக்குள்ளேயே ஏற்கெனவே அரசுக்குச் சொந்தமான எம்ஜிஆர் திரைப்பட நகர் இருந்தாலும், போதிய பராமரிப்பின்றி தற்போது மூடப்பட்டுக் கிடக்கிறது அந்த அருமையான நகரம். இதனால் தமிழ்ப் படப்பிடிப்புகள் பெரும்பாலும் ஐதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில்தான் நடக்கின்றன.
இந் நிலையை மாற்றி, பல மொழிகளில் ஏராளமான படங்கள் உருவாகும் சென்னையில் அனைத்து வசதிகளும் நிறைந்த நிரந்தரமான ஸ்டுடியோ அமைக்கும் வேலையில் இறங்கியுள்ளார் நீரவ் ஷா.
நல்ல முயற்சி, திருவினையாகட்டும்!

No comments: