Friday, August 29, 2008

ஏற்கெனவே திருமணமான பாய் பிரண்டை மணக்கிறார் ஷில்பா!

விரைவில் திருமணம் செய்து கொள்வேன் என அறிவித்துள்ளார் ஷில்பா ஷெட்டி.
இந்த முறை வெறும் அறிவிப்போடு நின்றுவிடாமல், தனது வருங்காலக் கணவர் யார் என்பதையும் அறிவித்துள்ளார். ஏற்கெனவே திருமணமாகி மனைவியுடன் வசிக்கும் தனது நீண்ட நாள் பாய் பிரண்ட் ராஜ் குந்த்ரா என்பவரைத்தான் திருமணம் செய்து கொள்ளப் போகிறாராம் ஷில்பா.
இந்திப் படவுலகில் மார்க்கெட் இழக்கும் தருணத்தில் பிக் பிரதர் நிகழ்ச்சி மூலம் மிகப் பெரிய அளவில் பிரபலமடைந்தார் ஷில்பா ஷெட்டி. பல கோடி ரூபாய் பரிசுகளும் புகழும் அவருக்குக் குவிந்தன. கிட்டத்தட்ட உலக அழகிப் பட்டம் வென்ற ஐஸ்வர்யாவுக்கு நிகராகப் பேசப்படும் நடிகையாகி விட்டார் ஷில்பா.

இப்போது அவர் கைவசம் இந்திப் படங்கள் மட்டுமல்ல, ஹாலிவுட் வாய்ப்புகளும் நிறைய உள்ளன. விரைவில் புதிய ஜேம்ஸ்பாண்ட் படமான குவாண்டம் ஆப் சோலேஸில் இரண்டு நிமிட சிறப்புக் காட்சியில் தோன்றுகிறார் ஷில்பா.

பிக் பிரதர் நிகழ்ச்சியின் இந்திய வடிவமான பிக் பாஸ் நிகழ்ச்சியை நடத்தும் பொறுப்பும் ஷில்பாவிடமே வழங்கப்பட்டுள்ளது.
இத்தனைப் புகழ், பணம் சேர்ந்த பின் வாழ்க்கையில் செட்டிலாவதுதானே முறை?

அந்த முயற்சியில்தான் ஷில்பாவும் இறங்கியிருக்கிறார்.
எப்போது திருமணம் என்று கேட்டால், இப்போது என்ன அவசரம் பிறகு பார்த்துக் கொள்ளலாம் எனக் கூறி வந்தவர், இப்போது அடிக்கடி திருமணம் பற்றிப் பேசத் தொடங்கிவிட்டார்.

ராஜ் குந்த்ரா என்பவரைத்தான் ஷில்பா விரைவில் திருமணம் செய்து கொள்ளவிருக்கிறாராம். ஷில்பாவின் நெடு நாள் பாய் பிரண்ட் இந்த ராஜ் குந்தர். அதுமட்டுமல்ல... இவருக்கு ஏற்கெனவே திருமணமாகி கவிதா என்ற மனைவியும் உள்ளார்.

"தற்போது என் கைவசமுள்ள பொறுப்புகளை முடித்துத் தரவே எனக்கு குறைந்த்து ஒரு வருடம் ஆகும். அதற்கப்புறம் கல்யாணத்துக்கு 6 மாதங்களாவது டைம் வேண்டாமா... ஆனால் சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கொண்டு, இரண்டு குழந்தைகளைப் பெற்றுக் கொண்டு குடும்ப வாழ்க்கையை அனுபவித்து வாழ வேண்டும் என்ற ஆசை எனக்கும் உண்டு, என்கிறார் ஷில்பா.

எல்லாம் சரிதான், இந்தக் கல்யாணத்துக்கு ராஜ் குந்தரின் மனைவி ஒப்புக் கொள்வாரா?

No comments: