Friday, September 19, 2008

இந்திய வங்கிகள் நிதி நிலை வலுவாக உள்ளது! – ப.சிதம்பரம்


 புதுடெல்லி: இந்தியாவில் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் நிதி இருப்பு  நிலைமை வலுவாக இருப்பதால் யாரும் கவலைப்பட தேவையில்லை என்று மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் தெரிவித்தார்.

அமெரிக்காவில் பிரபலமான லேஹ்மன் பிரதர்ஸ் நிதி நிறுவனம் திவாலாகி விட்டது. இதனால், இந்திய பங்கு சந்தையில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் தப்ரோதைய விவகாரங்களை ஆராய மத்திய மந்திரிசபை கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. 

பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் நடந்த இக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் கூறியதாவது:

லேஹ்மன் பிரதர்ஸ் திவாலானதால் இந்தியாவில் எந்த பாதிப்பும் ஏற்படாது. இந்தியாவில் உள்ள வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் வலுவாகவும் ஸ்திரமாகவும் உள்ளன. லேஹ்மன் பிரதர்ஸ் நிறுவனம் பற்றிய தகவல்களை ரிசர்வ் வங்கி கவர்னரும், பாரத ஸ்டேட் வங்கியின் தலைவரும் எனக்கு தெரிவித்துள்ளனர்.

அதன்படி மத்திய அரசின் நிதி நிறுவனங்களோ அல்லது வங்கிகளோ அந்த நிறுவனத்துடன் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ளவில்லை. இந்திய வங்கிகளின் இருப்பு நிலை நல்ல முறையில் உள்ளது.

ஆயிரம் கோடி ஸ்காலர்ஷிப்

 கல்லூரிகள் மற்றும் பல்கலை கழகங்களில் படிக்கும்  மாணவர்களுக்காக 11-வது ஐந்தாண்டு திட்ட காலத்தில் ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு ஸ்காலர்ஷிப் வழங்க மந்திரி சபை ப்புதல் அளித்துள்ளது.

எட்டாம் வகுப்புக்கு மேல் படிக்கும் உடல் ஊனமுற்ற மாணவர்களுக்காக 11-வது ஐந்தாண்டு திட்ட காலத்தில் ரூ.1,260 கோடியே 80 லட்சத்துக்கு ஸ்காலர்ஷிப் திட்டம் தொடங்கப்படுகிறது. இதனால் 5 லட்சத்து 20 ஆயிரம் மாணவர்கள் பலனடைவார்கள்.

எச்.எம்.டி. (வாட்ச்) லிமிட், இந்துஸ்தான் கேபிள் லிட், பாரத் வேகான் என்ஜீனியரிங் கம்பெனி லிட் போன்ற நட்டத்தில் இயங்கும் 10 பொதுத்துறை நிறுவனங்களுக்கு உதவுவதற்காக ரூ.79 கோடியே 70 லட்சம் அளிக்கப்படும், என்றார் சிதம்பரம்.

மந்திரி சபைக் கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ள இதர முடிவுகள் குறித்து அமைச்சர் ப்ரியரஞ்சன் தாஸ் முன்ஷி கூறியிருப்பதாவது:  

மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை சார்பாக மொகாலி நகரில் `நானோ அறிவியல் தொழில்நுட்ப கல்வி நிறுவனம்' அமைக்க மந்திரிசபை ஒப்புதல் அளித்துள்ளது. 11- வது ஐந்தாண்டு திட்ட காலத்தில் ரூ.142 கோடியே 45 லட்சம் செலவில் இந்த நிறுவனம் அமைக்கப்படும்.

பாசுமதி அரிசி போன்ற முக்கிய விளைபொருட்கள் மற்றும் இந்தியாவின் அறிவுசார் சொத்துரிமையை பாதுகாக்கவும் உணவு தயாரிப்புகள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணைய சட்டத்தில் தேவையான திருத்தம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

 இந்தியா-மாலத்தீவு இடையே விமானங்களை இயக்குவதற்காக போடப்பட்டுள்ள ஒப்பந்தத்துக்கும் இக்கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

மேலும், பிரான்சில் பணிபுரியும் இந்தியர்களின் நலனுக்காக அந்த நாட்டுடன் செய்து கொண்ட சமூக பாதுகாப்பு ஒப்பந்தத்துக்கும் அனுமதி அளிக்கப்பட்டது, என்றார் தாஸ்முன்ஷி

 

2 comments:

superlinks said...

hai

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in